அவுஸ்ரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 03 போட்டிகள் கொண்ட T20I தொடரில் பங்குபற்றுகிறது. தொடரில் முதலாவது போட்டி மழை காரணமாக சமநிலையில் நிறைவடைந்துள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்ரேலிய அணி முதலில் களத்தடுப்பினை தேர்வு செய்தது. மழை காரணமாக ஆட்டம் 15 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 15 ஓவர் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 107 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பாகிஸ்தான் சார்பில் பாபர் அசாம் 59 ஓட்டங்களையும், ரிஸ்வான் 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி 3.1 ஓவர்களில் 41 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் மீண்டும் மழை குறுக்கிட்டமையினால் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.
அடுத்த போட்டி நாளைய தினம் இடம்பெறவுள்ளது.