ஈகிள் கழகத்தின் சுற்றுபோட்டியை வெற்றி கொண்டது கோல்டன் பிரதர்ஸ்!

ஈகிள் விளையாட்டுக் கழகத்தின் 11வது வருட நிறைவையொட்டி வவுனியா மாவட்ட உதைபந்தாட்ட அணிகளுக்கிடையிலான உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது.

அணிக்கு ஒன்பது பேரைக் கொண்ட இச் சுற்றுப்போட்டியானது நான்கு நாட்களாக இடம்பெற்று இறுதிப்போட்டியில் யங்கஸ்டார் மற்றும் கோல்டன் பிரதர்ஸ் ஆகிய அணிகள் மோதிக்கொண்டன.

ஆட்ட நேரம் முடிவுறும் வரையில் இரு அணிகளும் எந்த ஒரு கோள்களும் பெறாத நிலையில் பனால்ட்டி முறையில் வெற்றி பெறுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.

இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி , ஆறுக்கு ஐந்து என்ற கோள் கணக்கில் யங்கஸ்ட் ஸ்டார் அணியினை தோற்கடித்து கோல்டன் பிரதர்ஸ் அணியினர் வெற்றி பெற்றிருந்தனர்.

வெற்றி பெற்ற அணிக்கு பாராளுமன்ற உறுப்பினர்களான, செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராதலிங்கம் திலீபன் மற்றும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் ஆகியோரால் வெற்றிக் கேடயமும் வழங்கிவைக்கப்பட்டது.