ரோகித் சர்மா புதிய சாதனை!

Rohit Sharma
Rohit Sharma

டெல்லியில் நடைபெற்ற இந்தியா – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதல் T20I கிரிக்கெட் போட்டி 1000வது T20I கிரிக்கெட் போட்டியாகும்.

இந்த போட்டியில் ரோகித் சர்மாவும் இரண்டு சாதனைகள் படைத்துள்ளார்.

இந்திய அணிக்காக அதிக T20I போட்டிகளில் பங்குபற்றிய வீரர் எனும் சாதனையை படைத்துள்ளார். இந்தியா-பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டி ரோகித் ஷர்மாவிற்கு 99வது போட்டியாகும்.

இதற்கு முன் எம்எஸ் தோனி இச்சாதனையினை புரிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அவர் 98 போட்டிகளில் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் வீரர் சொய்ப் மாலிக் 111 போட்டிகளில் பங்குபற்றி முதல் இடத்திலுள்ளார்.

மேலும் நேற்றைய போட்டியில் 8வது ஓட்டங்களை எடுத்தபோது T20I போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் எனும் சாதனையை படைத்துள்ளார்.