லங்கா பிரீமியர் லீக் கிரிக்கட் தொடரில் பங்கேற்கும் வீரர்கள் இன்று தெரிவு செய்யப்படவுள்ளனர்.
மாலை 4 மணியளவில் காணொளி ஊடாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐ.பி.எல் கிரிக்கட் தொடரானது எதிர்வரும் நவம்பர் மாதம் 21ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
குறித்த தொடரின் போட்டிகள் அனைத்தும் பல்லேகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மைதானங்களில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சென்னை சுப்பர்கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் டுவைன் பிராவோவுக்கு மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் சில நாட்கள் அல்லது சில வாரங்களுக்கு அணியில் போட்டிகளில் பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் அவருக்கு இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டிருந்தது.
இதனையடுத்து, டுவைன் பிராவோக்கு தொடர்ந்தும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இன்றைய போட்டியில் டுவைன் பிராவோவுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதால் அவருக்கு பதிலாக பந்துவீச்சாளர்களான இம்ரான் தாஹிர், அமெசன் வொரிஸ் மற்றும் மிச்சல் சென்ட்னர் ஆகியோரில் ஒருவர் இன்றைய தினம் சென்னை சுப்பர்கிங்ஸ் அணியில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.