நடப்பு ஆண்டுக்கான 20 தொடரின் 37ஆவது லீக் போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் றோயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
அபுதாபியில் இன்று (திங்கட்கிழமை) இரவு 7.30 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகவுள்ளது. இப்போட்டியில் சென்னை அணிக்கு டோனியும், ராஜஸ்தான் அணிக்கு ஸ்டீவ் ஸ்மித்தும் தலைமை தாங்கவுள்ளனர்.
இரு அணிகளும் இதுவரை 22போட்டிகளில் மோதியுள்ளன. இதில் 14முறை சென்னை அணியும், 8முறை ராஜஸ்தான் அணியும் வெற்றிபெற்றுள்ளன.
நடப்பு தொடரில் இரு அணிகளும் மோதிய முதல் லீக் போட்டியில், ராஜஸ்தான் அணி, 16 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
ஆகவே கடந்த போட்டியில் பெற்ற தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் சென்னை அணியும், இப்போட்டியில் சென்னை அணிக்கெதிரான இரண்டாவது வெற்றியை பதிவு செய்யும் ஆர்வத்தில் ராஜஸ்தான் அணியும் களமிறங்கவுள்ளன.