பஞ்சாப் அணியிடம் வீழ்ந்தது டெல்லி !

EiXWdOxUYAQ8dF
EiXWdOxUYAQ8dF

நடப்பு ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் நேற்றையதினம்(20) இடம் பெற்ற தொடரின் 38வது போட்டியில்
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.

தொடரின் 38ஆவது போட்டி ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று இரவு இடம்பெற்றது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி கப்பிடல் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடியடெல்லி கப்பிடல் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

டெல்லி கப்பிடல் அணி சார்பாக, மிகச் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய ஷிக்கர் தவான் 61 பந்துகளில் 106 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

165 ஓட்டங்கள் எனும் வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அணி, 19 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கைக் கடந்தது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அணி சார்பில்,நிக்கோலஸ் பூரன் 53 ஓட்டங்களையும், க்ளென் மேக்ஸ்வெல் l 32 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

இந்த நிலையில், போட்டியின் சிறப்பாட்டக்காரராக, ஷிக்கர் தவான்தெரிவு செஅணியிடம் ய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.