ராஜஸ்தான் அணியின் பிளே ஆப் கனவை கேள்விக்குறியாக்கிய ஹைதராபாத் அணி…

SAM 5581 960x640 1
SAM 5581 960x640 1

நடப்பு ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 40ஆவது போட்டியில் ஹைதராபாத்-சன்ரைஸ் அணி8 விக்கெட்டுகளினால் வெற்றிபெற்றுள்ளது.

13 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 37 ஆவது போட்டி அபுதாபி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நேற்று இரவு 7.30 இற்கு ஆரம்பமானது.

இந்தப் போட்டியில்ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் ஹைதராபாத்-சன்ரைஸ் ஆகிய அணிகள் பலபரீட்சை நடாத்தின.

இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஹைதராபாத்-சன்ரைஸ்அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து154 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

துடுப்பட்டத்தில்ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் சார்பில்
சஞ்சு சாம்சன் 36 ஓட்டங்களையும் பென் ஸ்டோக்ஸ் 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடியஹைதராபாத்-சன்ரைஸ் அணி18.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

துடுபட்டத்தில் மனிஷ் பாண்டே 83 ஓட்டங்களையும் விஜய் சங்கர் 52 ஓட்டங்களைஆட்டமிழக்காதுபெற்றுக்கொடுத்தனார்

இதேவேளை இந்த போட்டியின் ஆட்டநாயகனாக மனிஷ் பாண்டே தெரிவனத்துடன் தொடரின் 5தாவது இடத்துக்கு ஹைதராபாத்-சன்ரைஸ்அணி முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது