சென்னையை பந்தாடியது மும்பை அணி!

20200925282L
20200925282L

இந்தியன் பிமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில்மும்பை இந்தியன்ஸ் அணி 10 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றது.

IPL தொடரின் 41 ஆவது போட்டி ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் சார்ஜா சர்வதேச விளையாட்டரங்கில் நேற்று இரவு இடம்பெற்றது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றமும்பை இந்தியன்ஸ் அணி சென்னை அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 114 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அணி சார்பில் துடுப்பட்டத்தில் சாம் குர்ரன் அதிக படியாக 52 ஓட்ட ங்களையும் ,மகேந்திர சிங் தோனி 16 ஓட்ட ங்களையும் பெற்றுக்கொடுத்தனர் .

பந்து வீச்சில் மும்பை இந்தியன்ஸ் அணிசார்பில் ட்ரெண்ட் போல்ட்4 விக்கட்டுக்களையும் ராகுல் சாஹர் விக்கட்டுக்களையும் வீழ்த்தினார்கள்

115 ஓட்டங்கள் எனும் வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 12 தசம் 2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றியிலக்கை கடந்தது.

அணி சார்பாக இஷான் கிஷன்அதிரடியாக ஆடி 68 ஓட்ட ங்களையும் குயின்டன் டி கோக் 46 ஓட்ட ங்களையும் ஆட்டமிழாக்காமல் பெற்றுக்கொடுத்தனர் .

இந்த நிலையில், போட்டியின் சிறப்பாட்டக்காரராக மும்பை இந்தியன்ஸ் அணி ட்ரெண்ட் போல்ட் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.