இளையோருக்கான உலக பட்மிண்டன் போட்டி இரத்து!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இளையோருக்கான உலக பட்மிண்டன் போட்டியானது ( World junior Badminton Championships) இரத்து செய்யப்படுவதாக உலக பட்மிண்டன் சம்மேளனம் அறிவித்துள்ளது.

நடப்பு ஆண்டுக்கான உலக இளையோர் பட்மிண்டன் சம்பியன்ஷிப் போட்டியை நியூசிலாந்தில் நடத்த முதலில் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக இப்போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இந் நிலையில் நியூசிலாந்தில் பல்வேறு இடங்களில் நிலவும் கட்டுப்பாடுகள் மற்றும் கொரோனாத் தொற்றுப் பரவும் சூழல் காரணமாக போட்டியை நடத்துவதற்கு சாத்தியம் இல்லை என்றும், உலக இளையோருக்கான பட்மிண்டன் போட்டி இரத்து செய்யப்படுவதாகவும் உலக பட்மிண்டன் சம்மேளனம் அறிவித்தது.

மேலும் அடுத்த ஆண்டுக்கான போட்டி சீனாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.