நடப்புஆண்டுக்கான இந்தியன் பிரீமியர்லீக் தொடரின் 50ஆவதுலீக் போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ராஜஸ்தான் றோயல்ஸ் அணியும் மோதவுள்ளன.
அபுதாபியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ள இப்போட்டியில், பஞ்சாப் அணிக்கு கே.எல். ராகுலும், ராஜஸ்தான் அணிக்கு ஸ்மித்தும் தலைமை தாங்கவுள்ளனர்.
ராஜஸ்தான் அணி ஏற்கனவே பிளே ஓஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது. ஆனால் பஞ்சாப் அணி பிளே ஓஃப் சுற்றுக்கான வாய்ப்பின் விளிம்பில் உள்ளது.
இந்த போட்டியில் பஞ்சாப் அணி வெற்றிபெறும் பட்சத்தில் பிளே ஓஃப் சுற்றுக்கான வாய்ப்பை பலப்படுத்த முடியும்.
ஆகவே இப்போட்டியில் பஞ்சாப் அணி வெற்றிபெறுமா அல்லது ராஜஸ்தான் அணி வெற்றிபெறுமா என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்….