முதல் ரி-20 இன்று: பாகிஸ்தான்- ஸிம்பாப்வே மோதல்!

download 10 1
download 10 1

பாகிஸ்தான் மற்றும் ஸிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முதலாவது ரி-20 போட்டி இன்று (சனிக்கிழமை)தற்சமயம் நடைபெற்று வருகின்றது

ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெற்று வருகின்ற இப்போட்டியில், பாகிஸ்தான் அணிக்கு பாபர் அசாமும், சிம்பாப்வே அணிக்கு சாமு சிபாபாவும் தலைமை தாங்குகின்றனர்.

சிம்பாப்வே அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ரி20 தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் சென்றுள்ளது.

இதில் முதலாவதாக நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி கைப்பற்றியது.

ஆகவே எதிர்பார்ப்பு மிக்க ரி-20 தொடரை சிம்பாப்வே அணி கைப்பற்றி ஆறுதல் அடையுமா அல்லது பாகிஸ்தான் முழு தொடரையும் கைப்பற்றுமா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டும்