ஜிம்பாப்வேக்கு எதிரான ரி-20 தொடரை கைப்பற்றியது பாக்கிஸ்தான் அணி !

download 5 4
download 5 4

ஜிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில், பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், பாகிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்று முன்னிலைப் பெற்றுள்ளது.

ராவல்பிண்டி மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 134 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரியான் பர்ல் ஆட்டமிழக்காது 32 ஓட்டங்களையும், மாதேவர் 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில், ஹரிஸ் ரவூப் மற்றும் உஸ்மான் காதீர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், பஹீம் அஸ்ரப் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 135 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 15.1 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஹய்டர் அலி ஆட்டமிழக்காது 66 ஓட்டங்களையும், பாபர் அசாம் 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

சிம்பாப்வே அணியின் பந்துவீச்சில், பிளெஸிங் முசரபானி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 43 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 6 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 66 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஹய்டர் அலி தெரிவுசெய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ரி-20 போட்டி, நாளை ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெறவுள்ளது.