அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் விராட் கோலிக்கு வாய்ப்பில்லை

virat
virat

அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் மாதம் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நான்கு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணித் தலைவர் விராட் கோலிக்கு விளையாடும் வாய்ப்பு இழக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

எனினும், அடிலேடில் நடைபெறவுள்ள முதலாவது பகல் இரவு போட்டியில் விராட் கோலி விளையாடுவதாக இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

விராட் கோலியின் மனைவியான பொலிவூட் நடிகை அனுஷ்கா சர்மா தமது முதல் பிரசவத்திற்காக தயாராகியுள்ளதன் காரணமாக அவர் இப்போட்டித் தொடரில் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது என கிரிக்கெட் வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.