உலகக் கிண்ண துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற தமிழச்சி!

EDOXGu5U4AAWHV8
EDOXGu5U4AAWHV8

உலகக் கிண்ண துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வளரிவான் என்ற யுவதி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

பிரேசிலின் ரியோடி ஜெனேரியோவில் ஐ.எஸ்.எஸ்.எஃப் உலகக் கிண்ண துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்துகொண்டு 10 மீட்டர் ஏர் ரைஃபில் பிரிவில் 251.7 புள்ளிகள் எடுத்து முதலிடத்தை பிடித்திருக்கிறார்.

இவருக்கு அடுத்தபடியாக பிரிட்டனைச் சேர்ந்த மெக்கின்டோஷ் சியோனைட் 250.6 புள்ளிகள் எடுத்து இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தையும், தைவானைச் சேர்ந்த லின் யிங்-ஷின் 229.9 புள்ளிகள் எடுத்து மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.

72 நாடுகளில் இருந்து 541 பேர் பங்கேற்கும் இந்த உலகக் கிண்ண போட்டியில் பல்வேறு பிரிவுகளில் வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.