காலி அணியை 34 ஓட்டங்களினால் தோற்கடித்து கொழும்பு கிங்ஸ் அணி வெற்றி!

ANDRE 50 runs 1 1024x683 1
ANDRE 50 runs 1 1024x683 1

நாட்டில் நடைபெற்று வரும் லங்காபிரீமியர்லீக் தொடரின் நான்காவது போட்டியில் நேற்றிரவு அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான கொழும்பு கிங்ஸ் அணியும் , ஷாஹித் அப்ரிடி தலைமையிலான காலி கிளாடியேட்டர்ஸ் அணியும் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் பலப்பரீ ட்சை நடத்தின

தொடர் மழைக் காரணமாக போட்டியானது 5 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே இடம்பெற்றிருந்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு அணியானது ரஸ்ஸலின் அபார ஆட்டத்தினால் நிர்ணயிக்கப்பட்ட 5 ஓவர்களுக்கு ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 96 ஓட்டங்களை குவித்தது.

கொழும்பு அணி சார்பில் திக்ஷிலா டி சில்வா ஓட்டம் எதுவும் பெறாமல் ஆட்டமிழக்க, ரஸ்ஸல்ஸ் 19 பந்துகளை எதிர்கொண்டு 4 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள் அடங்கலாக 65 ஓட்டங்களையும், லஹிரு இவன்ஸ் 10 பந்துகளுக்கு 21 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்றனர்.

பந்து வீச்சில் காலி அணி சார்பில் மொஹமட் அமீர் 2 ஓவர்களுக்கு பந்து வீசி 46 ஓட்டங்களையும், அஷித பெர்னாண்டோ ஒரு ஓவர் பந்து வீசி 26 ஓட்டங்களையும் அதிகபடியாக வாரி வழங்கியிருந்தனர்.

97 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய காலி அணி 5 ஓவர்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து 62 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 34 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது.

அந்த அணியின் சார்பில் தனுஷ்க குணதிலக்க மாத்திரம் அதிபடியாக 30 ஓட்டங்களை பெற்றார்.