தென் ஆப்ரிக்கா-இங்கிலாந்து இடையேயான முதல் ஒரு நாள் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி அதிகாரப்பூர்வமாக அறிவத்துள்ளது.
தென் ஆப்ரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, முன்னதாக நடந்த 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 3-0 என கைப்பற்றியது.
இந்நிலையில், தென் ஆப்ரிக்கா அணி ஒரு நாள் தொடரை கைப்பற்றி இங்கிலாந்து அணிக்கு பதிலடி கொடுக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி டிசம்பர் 4ம் திகதி நியூலேண்ட்ஸ், கேப் டவுன் மைதானத்தில் நடைபெறவிருந்தது.
இந்நிலையில், தென் ஆப்ரிக்கா வீரர் ஒருவருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து முதல் ஒரு நாள் போட்டி டிசம்பர் 6ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி அறிவித்துள்ளது.
இரு அணிகள் மோதும் 2வது ஒரு நாள் போட்டி டிசம்பர் 7ம் திகதி மற்றும் 3வது ஒரு நாள் போட்டி 9ம் திகதி நடைபெறவுள்ளது.