சிங்கப்பூர் போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ராஜ்நாத் சிங்

singapore
singapore

இந்தியா-சிங்கப்பூர் பாதுகாப்புத்துறை மந்திரிகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சிங்கப்பூரிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், சிங்ப்பூர் துணைப் பிரதமர் ஹெங் ஸ்வீ கீட்டை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது இந்தியா-சிங்கப்பூர் நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிங்கப்பூரில் உள்ள போர் நினைவிடத்திற்கு சென்ற ராஜ்நாத் சிங், இரண்டாம் உலகப்போரின் போது உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.