கலிபோர்னியா மாகாணத்திற்கு அருகில் சொகுசு படகில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 33 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் தெற்கு பகுதியில் உள்ள சன்டாகுரூஸ் என்ற தீவிற்கு அருகிலேயே நேற்று இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து ஏற்பட்ட சொகுசு படகில் 38 பேர் பயணித்ததாகவும், அவர்களில் ஐவர் மீட்பு படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் 33 பேர் உயிரிழந்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகின்றது.
தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.