ஓமனில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில் 215 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தற்போது ஓமன் நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 719 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 505 ஆக அதிகரித்துள்ளது. தற்போது குணமடைந்தவர்களின் சதவீதம் 93.5 ஆக உள்ளது. கொரோனா தொற்று காரணமாக நேற்று 3 பேர் பலியானார்கள். இதனால், பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,475 ஆக உயர்ந்தது. தற்போது உடல்நலக்குறைவால் 54 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.