அப்பாச்சி ரக ஹெலிகொப்டர்கள் இன்று இந்திய விமானப்படையுடன் இணைப்பு..!

EDg8 b4U8AAq69c
EDg8 b4U8AAq69c

அமெரிக்காவின் போயிங் நிறுவனம் தயாரித்த அப்பாச்சி ஏஹெச்-64ஈ ( AH-64e ) ரகத்தைச் சேர்ந்த 8 ஹெலிகொப்டர்கள் விமானப்படைத் தளபதி பி.எஸ்.தனோவா முன்னிலையில் இந்திய விமானப்படையில் இன்று இணைக்கப்பட்டன.

அமெரிக்காவில் இருந்து அதி நவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய, தாக்குதல் வகையைச் சேர்ந்த 22 அப்பாச்சி ஏஹெச்-64 ஈ ரக ஹெலிகொப்டர்களை வாங்க மத்திய அரசு, 2015 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. முதல் கட்டமாக, சில ஹெலிகொப்டர்கள் ஜூலை மாதம் ஒப்படைக்கப்பட்டன. மேலும் 8 ஹெலிகொப்டர்கள், பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள விமானப் படை தளத்தில் நடந்த நிகழ்ச்சியில் இன்று முறைப்படி இணைக்கப்பட்டன.

விமான நிலையத்துக்கு வந்த விமானங்களுக்குத் தண்ணீரை அடித்து பின்னர் பொட்டு வைத்து, தேங்காய் உடைத்து சிறப்பு பூஜை நடத்தப்பட்ட பின்பே விமானப்படையில் இணைத்துக் கொள் ளப்பட்டது.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், துல்லியமான தாக்குதல்களை நடத்துவதற்கு இந்த ஹெலிகொப்டர்கள் பயன்படும் என்றும், 2020ஆம் ஆண்டுக்குள்ளாக 22 ஹெலிகொப்டர்களும் இந்திய விமானப் படைக்கு கிடைத்து விடும் என்றும் தெரிவித்தனர்.

அப்பாச்சி ஏ.எச்.64ஈ ரக ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்தும் 14ஆவது நாடாக இணைந்துள்ளது. இது மணிக்கு 279 கிலோ மீட்டர் என்ற வேகத்தை எட்டக் கூடியது. ஒரு நிமிடத்தில் 256 நகரும் இலக்குகளை கண்டறியும்.

இந்த விழாவில், விமானப்படை தளதிபதி, பி.எஸ்.தனோவா, ஏர் மார்ஷல் நம்பியார் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.