இந்தியாவுடன் இனி போர் செய்ய மாட்டோம்: இம்ரான் கான்.

201906070024501591 Imran Khan insulted the king of Saudi Arabia SECVPF
201906070024501591 Imran Khan insulted the king of Saudi Arabia SECVPF

இந்தியாவுடன் இனி எந்நிலையிலும் போர் செய்யப் போவதில்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் லாகூரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

காஷ்மீரில் இந்தியாவின் நடவடிக்கைகளை உலக நாடுகள் தடுக்காவிடின் அணு ஆயுத பலம் கொண்ட இரு நாடுகளும் இராணுவ நடவடிக்கையில் ஈடுபடுவதுடன், போரை சந்திக்க நேரிடும் எனவும் பாகிஸ்தான் பிரதமர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் ஆயுத பலங்கள் கொண்ட இருநாடுகளும் போர் புரிந்தால் அது உலகநாடுகளுக்கு பாரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

எந்த பிரச்சினைக்கும் போர் ஒரு தீர்வைக் கொடுக்காது என்பதை இந்தியாவுக்கு நான் சொல்ல விரும்புகிறேன்.

நாங்கள் ஒருபோதும் இந்தியாவுடன் போர் செய்ய விரும்பவில்லை. இரு நாடுகளும் அணு ஆயுதங்களை கொண்டிருக்கின்றன. பதற்றம் அதிகரித்தால் உலக நாடுகள் அபாயத்தை நோக்கி தள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.