சீனாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரிகளில் ஒன்றான சாங்கன் ஏரியில் குளிர் கால மீன் பிடித்தல் ஆரம்பமாகியுள்ளது.
வழக்கமாக டிசம்பர் மாதத்தில் இறுதி வாரத்தில் தொடங்கும் இந்த சீசனில், ஐஸ் கட்டியாக உறைந்துள்ள ஏரியிலிருந்து மீனவர்கள் மீன்பிடித்து விற்பனை செய்வது வழக்கம்.
இப்போது சாங்கன் ஏரி தண்ணீர் உறைந்து ஐஸ் கட்டிகளாக மாறியுள்ளது. மீனவர்கள் பாரம்பரிய முறைப்படி, குதிரைகளை பயன்படுத்தி, ஐஸ் கட்டிகளை உடைத்து மீன்களை பிடித்து விற்பனை செய்து வருகின்றனர்.