சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரசானது பின்னர் உலகமெங்கும் அடுத்தடுத்து பரவி அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.
உலக அளவில் உயிரிழப்பு மற்றும் பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா தொற்றால் 2 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைந்துள்ளதால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியை தாண்டியுள்ளது.
கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக 3 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அங்கு கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3.50 இலட்சத்தைத் தாண்டியுள்ளது.
கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1.20 கோடியைத் தாண்டியுள்ளது. 79 இலட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.