அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட ஒரு இலட்சத்து 45 ஆயிரத்து 163 கொரோனா பரிசோதனை முடிவுகளில் 1,856 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் தற்போது பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 9 ஆயிரத்து 678 ஆக உயர்ந்துள்ளது. இதில் நேற்று மட்டும் 1,577 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனால் தற்போது குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 86 ஆயிரத்து 19 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று 2 பேர் பலியானார்கள். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 671 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 22 ஆயிரத்து 988 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக தினமும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் நேற்று உச்சநிலையாக 1,856 பேராக பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.