புதிய வகை வீரியமிக்க கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் பிரிட்டனில் ஏற்கனவே பைசர் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு, பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகா ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது.
இதனையடுத்து தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது. முதல் தடுப்பூசி, பிரைன் பிங்கர் என்ற 82 வயது நீரிழிவு நோயாளிக்கு போடப்பட்டது.