வளைகுடாவில் தென்கொரியாவின் எண்ணெய் கப்பலை ஈரான் கைப்பற்றியுள்ளது.
வளைகுடா கடற்பரப்பில் ஈரானின் புரட்சிகர காவல்படையினர் தென்கொரியாவின் எண்ணெய் கப்பலை கைப்பற்றியுள்ளனர் என ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தென்கொரியா தனது நாட்டை சேர்ந்த எண்ணெய் கப்பலை ஈரான் கைப்பற்றியுள்ளதை உறுதி செய்துள்ளதுடன் கப்பலில் 20 பேர் காணப்பட்டனர் எனவும் தெரிவித்துள்ளது.
கப்பலையும் கைது செய்யப்பட்டவர்களையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என தென்கொரியா வேண்டுகோள் விடுத்துள்ளது.