ஜெர்மனி அருங்காட்சியகத்தில் பழங்கால நகைகள் கொள்ளை

german
german

ஜெர்மனியின் ‘கிரீன் வாலட்’ என்ற அருங்காட்சியகதில் ஐரோப்பிய நாடுகளின் பழங்கால பொக்கிஷங்கள், அரிய கலை பொருட்கள் உள்ளிட்டவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை முகமூடி கொள்ளையர்கள் 2 பேர் அருங்காட்சியகத்தில் உள்ள பழங்கால நகைகள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் இருந்த நகை பெட்டி ஒன்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

அந்த நகை பெட்டியில் 18-ம் நூற்றாண்டை சேர்ந்த வைரங்கள், மாணிக்கங்கள் உள்பட விலைமதிக்க முடியாத நகைகள் ஏராளமாக இருந்ததாக அருங்காட்சியக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அருங்காட்சியகத்தில் உள்ள கண்காணிப்பு கமராவில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி இருப்பதாகவும், அதை அடிப்படையாக கொண்டு அவர்களை வலைவீசி தேடி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.