இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு!

தமிழகத்தில் நேற்றைய தினம் 971 பேர் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இதன்படி, தமிழகத்தில் இதுவரையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 இலட்சத்து 2 ஆயிரத்து 385 ஆக அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேநேரம், 820 பேருக்கு நேற்றைய தினம் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதற்கமைய, தமிழகத்தில் தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 8 இலட்சத்து 22 ஆயிரத்து 370 ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்றைய தினம் 11 மரணங்கள் பதிவான நிலையில், தமிழகத்தில் கொவிட்-19 தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 177 ஆக அதிகரித்துள்ளது.

7 ஆயிரத்து 808 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.