அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிரான அரசியல் குற்றச்சாட்டு பிரேரணையை ஜனநாயக கட்சியினர் சற்று முன்னர் வெளியிட்டுள்ளனர்.
கிளர்ச்சியை தூண்டினார் என்ற குற்றச்சாட்டினை ஜனநாயக கட்சியினர் முக்கியமாக முன்வைத்துள்ளனர்
ஜனாதிபதி தேர்தல் வெற்றியை ஏற்றுக்கொள்ள மறுத்தமை, மக்களை கலகத்தில் ஈடுபட தூண்டினார். இதன் மூலம் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கும் ஜனநாயகத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்தினார் என அரசியல் குற்றச்சாட்டு பிரேரணை தெரிவிக்கின்றது