இந்தியாவில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத்தை அடைந்து­­­ வரும் நிலையில், இன்று இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக கொரோனா தொற்று எண்ணிக்கை பதிவாகியிருக்கிறது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 105 இலட்சத்தை நெருங்கியது. 101 இலட்சம் பேர் குணமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் மொத்தமாக 104 இலட்சத்து 79 ஆயிரத்து 179 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 101 இலட்சத்து 11 ஆயிரத்து 294 பேர் குணமடைந்துள்ளனர், 2 இலட்சத்து 16 ஆயிரத்து 558 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,51,327 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.