இந்தியா முழுவதும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது என்பதும், இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் கடந்த சில நாட்களாக நடைபெற்றது.
தமிழகத்தில் முதல் தடுப்பூசியை மதுரை அரசு மருத்துவமனையில் தொடங்கி வைக்கப்பட்டது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தடுப்பூசியை போடும் நடவடிக்கையை தொடங்கி வைத்தார் .
இந்த நிலையில் தமிழகத்தில் முதல் தடுப்பூசியை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பணிபுரியும் சுகாதார பணியாளர் முத்துமாரி என்ற பெண்ணுக்கு செலுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
தமிழகத்தின் முதல் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் முத்துமாரி அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.