பைசர் தடுப்பூசியை செலுத்திக் கொண்ட முதியவர்கள் 29 பேர் பலி! -நோர்வே அரசு அறிவிப்பு!

pfizer vaccine 1
pfizer vaccine 1

நோர்வேயில் பைசர் நிறுவனத்தின் கொரோனாத் தொற்றுக்கான  தடுப்பூசியை செலுத்திக்கொண்ட முதியவர்கள் 29 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

தடுப்பூசி எடுத்துக் கொண்ட சில மணி நேரங்களிலேயே இம் முதியவர்கள்  உயிரிழந்ததாகவும், இது குறித்து மருத்துவர்கள் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும்  அந் நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் இத் தடுப்பூசியைச் செலுத்திக் கொண்ட  பலர் நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பைசர் தடுப்பூசிக்கும் இந்த மரணங்களுக்கும் நேரடி தொடர்பு இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை எனக் கூறும் மருத்துவ நிபுணர்கள், இறந்தவர்களில் பலருக்கு வயிற்றுப்போக்கு, குமட்டல் மற்றும் காய்ச்சல் போன்ற பொதுவான அறிகுறிகள் இருந்ததாக தெரிவிக்கின்றனர்.