மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 3,081 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

0223 637227363939888106
0223 637227363939888106

இந்தியாவிலேயே கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் தற்போது தினந்தோறும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இன்று அம்மாநிலத்தில் புதிதாக 3,081 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19,90,759 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இன்று 50 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50,738 ஆக அதிகரித்துள்ளது.