இந்திய இராணுவத்தில் இன்று முதல் மோட்டார் சைக்கிள் நோய்காவுவண்டி(அம்பூலன்ஸ்) சேவை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அந்நாட்டின் மத்திய காவற்துறை , அணுசக்தி மருத்துவ மையம், பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை இணைந்து குறித்த நோய்காவுவண்டி (அம்பூலன்ஸ்) சேவையை உருவாக்கியுள்ளன.
பாதுகாப்பு படையினருக்கு அவசர மருத்துவ வசதி தேவைப்படும் நிலையிலோ,அல்லது மோதல் நடைபெறும் இடங்களில் காயமடையும் வீரர்களை காக்கவே இவ் நோய்காவுவண்டி( அம்பூலன்ஸ்கள் )பயன்படும் என்று இராணுவம் தெரிவித்துள்ளது.