இந்தியாவில் நேற்றுமுன்தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. தொடர்ந்து நேற்றும், இன்றும் நடைபெற்றது.
உத்தர பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த 52 வயது நபருக்கு நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர் நேற்று மாலை மரணம் அடைந்தார். மூன்று வைத்தியர்கள் கொண்ட குழு பிரேத பரிசோதனை செய்தது. அதில் கொரோனா தடுப்பூசி தொடர்பான விளைவுகளால் மரணம் அடையவில்லை எனத் தெரியவந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மற்றொருவர் கர்நாடக மாநிலம் பெல்லாரியை சேர்ந்தவர். இவருக்கு 43 வயது. நேற்று முன்தினம் தடுப்பூசி போட்டுக்கொண்ட இவர், இன்று மரணம் அடைந்தார். அவரது உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. அதன்முடிவில் மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும்.