இத்தாலியில் கொரோனாத் தொற்றிலிருந்து குணமடைந்த 108 வயது மூதாட்டியொருவர் தடுப்பு மருந்தினை செலுத்திக்கொண்டார்.
அந் நாட்டில் மிலன் என்ற பகுதியிலுள்ள காப்பகத்தில், முதியோர்களுக்கு கொரோனாத் தொற்றுக்கான தடுப்பூசி செலுத்தும் பணி நேற்றைய தினம் நடைபெற்றது.
இதன் போது பாத்திமா நெக்ரினி (Fatima Negrini) என்ற 108 வயது மூதாட்டியொருவர் தடுப்பு மருந்தினை எடுத்துக் கொண்டார்.
மேலும் இவர் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் உலகிலேயே அதிக வயதுடைய நபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.