பிரித்தானியாவில் கண்டறியப்பட்டுள்ள வீரியம் கொண்ட புதிய வைரஸ், கடந்த 25 ஆம் திகதி வரையில், 70 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
தொற்றுநோய் விஞ்ஞானவியல் துறையின் புதுப்பிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
கடந்த வாரத்தில் மாத்திரம் 10 நாடுகளில் பரவியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வைரஸானது, இதுவரையில் 31 நாடுகளில் பரவியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரத்தில் மாத்திரம், 8 நாடுகளில் அந்த வைரஸ் பரவியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.