வடகொரிய தலைவரின் கனவு நகரம் திறந்து வைப்பு

வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் தனது கனவு திட்டங்களில் ஒன்றான நவீன நகரத்தை திறந்துவைத்தார்.

கிம் ஜாங் அன் குடும்பத்தினரின் பூர்வீகமாக கருதப்படும் பேக்டு மலைக்கு அருகே, நூற்றுக்கணக்கான ஏக்கரில் சொகுசு வசதிகளுடன் அமைந்துள்ள இந்த நகரத்துக்கு ‘சம்ஜியோன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த நகரத்தில் 4 ஆயிரம் குடும்பங்கள் வசிக்க முடியும்.

வடகொரியா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகள் காரணமாக கட்டுமான பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் எதிர்பார்த்ததை விட தாமதமாகவே இந்த நகரம் திறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் கட்டாய தொழிலாளர்கள் மூலமே இந்த நகரம் கட்டி முடிக்கப்பட்டதாகவும், தொழிலாளர்கள் அனைவரும் கொத்தடிமைகள் போல் நடத்தப்பட்டதாகவும் மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.