நைஜீரியாவில் உணவகம் ஒன்றில் மனித மாமிசம் சமைத்து விற்ற பெண் கைது!

Meat
Meat

நைஜீரியாவின் அனாம்ப்ரா மாகாணத்தில் உணவகம் நடத்தி வந்த ஒரு பெண்ணை காவற்துறையினர் கைது செய்தனர். உலகிலேயே குற்றச்சம்பவங்கள் அதிகம் நடக்கும் நாடுகளில் ஒன்று நைஜீரியா. வறட்சி, பஞ்சம், ஏழ்மை இதற்கு முக்கிய காரணங்கள் ஆகும்.இந்த நிலையில், அனாம்ப்ரா மாகாணத்திலுள்ள குறிப்பிட்ட உணவகத்தில் மனித இறைச்சி விற்கப்படுவதாக காவற்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.


இதனையடுத்து,காவற்துறையினர் உணவகத்தில் திடீர் சோதனை நடத்தியுள்ளனர்.

இதன்போது மனித இறைச்சி விற்கப்படுவது கண்டறியப்பட்டது.இறைச்சிக்காக பயன்படுத்தப்பட்ட மனித உடல் பாகங்களையும் சமைக்கத் தயாராக இருந்த இறைச்சியையும் காவற்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும், உணவகத்தை நடத்தி வந்த பெண்ணை கைது செய்துள்ள காவற்துறையினர் இறைச்சிக்காக நபர் கொல்லப்பட்டரா அல்லது அது இறந்தவர்களின் உடலா என்பது குறித்த தகவலை வெளியிடவில்லை.

2015 ஆம் ஆண்டு இதே அனாம்ப்ரா மாகாணத்திலுள்ள உணவகம் ஒன்றில் மனித இறைச்சி விற்கப்பட்டதை காவற்துறையினர்உகண்டுபிடித்தனர். இக்கொடூர செயலில் ஈடுபட்ட 10 பேரை கைது செய்திருந்தனர்.