விவாகரத்து செய்யப்போகும் இளவரசர் ஹரி- மேகன் தம்பதி

625.0.560.350.160.300.053.800.668.160.90 2
625.0.560.350.160.300.053.800.668.160.90 2

தொலைக்காட்சி ஆளுமை ஓப்ரா வின்ஃப்ரே உடனான நேர்காணலுக்கு பின்னர் இளவரசர் ஹரி- மேகன் தம்பதி விவாகரத்தின் விளிம்பில் இருப்பதாக, மேகன் மெர்க்கலின் சகோதரி சமந்தா பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

விரிவான பலகட்ட கலந்தாய்வுகளால் மட்டுமே இளவரசர் ஹரியும் மேகன் மெர்க்கலும் தங்கள் திருமண பந்தத்தை இதுநாள் வரை பாதுகாத்து வருவதாகவும் சமந்தா மெர்க்கல் வெளிப்படுத்தியுள்ளார்.

ஆனால், சமந்தா மெர்க்கல் கூறுவது போல, இளவரசர் ஹரி- மேகன் தம்பதிகளிடையே, கருத்துவேறுபாடு அல்லது முரண்பாடு ஏதும் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இருப்பினும், சமந்தா மெர்க்கல் தமது சகோதரியின் திருமண வாழ்க்கை, விவாகரத்தின் விளிம்பில் இருப்பதை தாம் உணர்வதாக உறுதிபட தெரிவித்துள்ளார்.

உளவியல் மற்றும் திருமணம் தொடர்பான பல முக்கிய கலந்தாய்வுகளுக்கு பின்னரே, இருவரும் தங்கள் திருமண பந்தத்தில் உறுதியாக இருப்பதாக கூறும் சமந்தா மெர்க்கல்,

இருவரும் பிரித்தானிய அரச குடும்பத்திற்கு ஏற்படுத்தியுள்ள சேதம் கொஞ்சமல்ல, இப்போது நேர்காணம் மூலம் எனவும் காட்டமாக தெரிவித்துள்ளார்.

சமந்தா மெர்க்கலுடன் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தாம் தொடர்பில் இல்லை என ஓப்ரா வின்ஃப்ரே நிகழ்ச்சியில் மேகன் மெர்க்கல் தெரிவித்திருந்தார்.

ஆனால் 2008-ல் மேகன் மெர்க்கலை தாம் சந்தித்துள்ளதாக சமந்தா தற்போது குறிப்பிட்டுள்ளார்.

மட்டுமின்றி, மேகன் மெர்க்கலின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஜோடித்த கதைகளை சமந்தா மெர்க்கல் வெளியிட்டு வருவதாகவும் முன்னர் விமர்சனங்கள் எழுந்தது.

தற்போது தனியார் ஊடகம் ஒன்றிற்கு அளித்த நேர்காணலில், இளவரசர் ஹரி தமது காதல் மனைவியுடன் அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லை என சமந்தா குறிப்பிட்டுள்ளார்.

மேகன் மெர்க்கலின் நடவடிக்கைகளை ஹரி கேள்வி கேட்கலாம் அல்லது கேட்டிருக்கலாம். ஹரி ஒன்றும் சிறுவனல்ல, ராணுவத்தில் பணியாற்றியவர், மேகன் மெர்க்கல் இதுவரை கூறியதெல்லாம் பொய் என அவர் சுட்டிக்காட்டியிருக்கலாம். ஆனால் அது நடக்கவில்லை என சமந்தா தெரிவித்துள்ளார்.

சிறந்த சட்டத்தரணிகளும் கலந்தாய்வு மேற்கொள்வதில் நிபுணர்களும் அவர்களுக்கு உதவியாக உள்ளனர். நாளை எது வேண்டுமானாலும் நடக்கலாம் என சமந்தா மெர்க்கல் அந்த நேர்காணலை முடித்துள்ளார்.