ஓமனில் ஒரேநாளில் 1,162 பேருக்கு கொரோனா!

202009280529000009 In Maratha New to 18 thousand people Corona kills 380 people SECVPF
202009280529000009 In Maratha New to 18 thousand people Corona kills 380 people SECVPF

ஓமனில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில் 1,162 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது ஓமன் நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 59 ஆயிரத்து 218 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 568 பேர் நேற்று குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 43 ஆயிரத்து 966 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 90.4 சதவீதமாக இருந்து வருகிறது. கொரோனா தொற்று காரணமாக 9 பேர் பலியானார்கள். இதனால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,678 ஆக இருந்து வருகிறது. தற்போது உடல்நலக்குறைவால் 156 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.