தாய்வானில் ரயில் தடம் புரண்டதால் நால்வர் பலி

Ex8JH3TWgAEmoI
Ex8JH3TWgAEmoI

தாய்வானின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சுரங்கப் பாதையில் வெள்ளிக்கிழமை ரயிலொன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

டைதுங் நோக்கி பயணிக்கும் இந்த ரயில், ஹுவாலியனுக்கு வடக்கே ஒரு சுரங்கப்பாதையில் தண்டவாளத்திலிருந்து இறங்கி, சுரங்கப்பாதையின் சுவருடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த அனர்த்தத்தில் குறைந்தது நான்கு பேர் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. பலத்த காயங்களுடன் மூன்று பேர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மேலும் 20 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த ரயில் சுமார் 350 பேரை ஏற்றிச் சென்றதாகவும், மீட்பு முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.