தாய்வான் தொடருந்து விபத்து; பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Ex8JH3TWgAEmoI
Ex8JH3TWgAEmoI

இன்று இடம்பெற்ற தாய்வான் கடுகதி தொடருந்து விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 48 ஆக உயர்வடைந்துள்ளது.

490 பயணிகளுடன் பயணித்த தொடருந்து சுரங்கபாதையில் விபத்திற்குள்ளான நிலையில் தடம்புரண்டது.

இது தவிர, 66 பேர் கடும் காயங்களுக்கு உள்ளாகியதாக மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தலைநகர் தாய்பேயில் இருந்து ரைற்றுங் நகரை நோக்கி சென்ற வேளையிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

விபத்துக்குள்ளான தொடருந்து மணிக்கு 130 கிலோ மீட்டர் பயணிக்கக் கூடிய தன்மையை கொண்டுள்ளதுடன், பாதுகாப்பானது என கருதப்பட்டதாகும்.

தொடருந்தின் 8 பெட்டிகள் பெரும் சேதத்திற்கு உள்ளான நிலையில், மீட்பு பணியாளர்கள் பெரும் சிரமத்திற்கு மத்தியில் பயணிகளை மீட்டெடுத்துள்ளனர்.

தாய்வானில் பல தசாப்த காலங்களுக்கு பின்னர் இடம்பெற்ற பாரிய இந்த விபத்தில் மரணித்தவர்களது குடும்பங்களுக்கு ஜனாதிபதி சூ செங் சங்  இரங்கலை வெளிப்படுத்தியுள்ளதுடன், உடனடியாக விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.