ஜோர்தானின் முன்னாள் முடிக்குரிய இளவரசர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்!

1110773922 0 362 2201 1600 1920x0 80 0 0 55b765c1152d40d060dd04ff90e24f52
1110773922 0 362 2201 1600 1920x0 80 0 0 55b765c1152d40d060dd04ff90e24f52

ஜோர்தானின் முன்னாள் முடிக்குரிய இளவரசர் ஹம்சா பின் ஹூசேன் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது ஊழல், நிர்வாக திறமையின்மை மற்றும் துன்புறுத்தல்கள் போன்ற செயற்பாடுகள் அதிக அளவில் இடம்பெறுவதாக பரவலாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து அரச நிர்வாகத்தை வீழ்த்துவதற்கு சதி திட்டத்தை மேற்கொண்டார்கள் என தெரிவித்து பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தநிலையிலேயே முன்னாள் முடிக்குரிய இளவரசரும் கைதாகியுள்ளார்.

எவ்வாறாயினும், அவர் வீட்டுக்காவலில் வைக்கப்படவில்லை என இராணுவ அதிகாரி ஒருவர் மறுப்பு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.