18 வயது பூர்த்தியான அனைவருக்கும் தடுப்பூசி- ஜோ பைடன்

Joe Biden 0887
Joe Biden 0887

அமெரிக்காவில் எதிர்வரும் 19ஆம் திகதிக்குள் 18 வயது பூர்த்தியான அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்களாகின்றனர் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசிசெலுத்தும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், எதிர்வரும் 19ஆம் திகதிக்குள் 18 வயது பூர்த்தியான அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்கள் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக வெள்ளை மாளிகையில் உரையாற்றிய அவர், இனி குழப்பம் விளைவிக்கும் விதிகளோ, கட்டுப்பாடுகளோ கிடையாது என தெரிவித்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் 19ஆம் திகதிக்கு பின்னர் வயது வந்தவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியைசெலுத்திக்கொள்ள தகுதியானவர்களாகின்றனர் என தெரிவித்துள்ளார்.