பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 4,004 பேருக்கு கொரோனா!

vairash1 1
vairash1 1

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் பாகிஸ்தான் 31-வது இடத்தில் உள்ளது.

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 4,004 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 இலட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 102 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

அங்கு கொரோனா தொற்றில் இருந்து 6.20 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 64 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.