தமிழகத்தின் பாதுகாப்பிற்கு பயங்கரவாதிகள் எச்சரிக்கை

isis 1
isis 1

அல்கைடா மற்றும் ஐஎஸ் அமைப்பு உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புக்கள் சிலவற்றுக்கு தடைவிதிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதையடுத்து தமிழகத்தில் உள்ள சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் கரையோர பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி 11 பயங்கரவாத அமைப்புக்களுக்கு தடைவிதிக்கும் அரசாங்கத்தின் தீர்மானம் காரணமாக குறித்த அமைப்புக்களுடன் தொடர்புடையவர்கள் இந்தியாவுக்குள் பிரவேசிப்பதற்கான சாத்தியம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன் பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புடையவர்கள் வான் மார்க்கம் அல்லது கடல்மார்க்கமாக தமிழகத்திற்கு பிரவேசிக்க கூடிய சாத்தியம் உள்ளதாக காவல்துறை ஆணையாளர்கள் மற்றும் காவல்துறை அத்தியட்சகர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புடையவர்கள் மீன்படி படகுகளில் பதுங்கியிருப்பதற்கான சாத்தியம் அதிகளவில் காணப்படுவதாகவும் தமிழ மாநில காவல்துறை ஆணையாளர் தெரிவித்துள்ளார்

இதன்காரணமாக அபாயம் நிறைந்த அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பினை பலப்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளார்.