தமிழ் பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும் – மோடி

modi 1614216405
modi 1614216405

தமிழ் பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும் எனத் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிறந்திருக்கின்ற பிலவ புத்தாண்டை மக்கள் அனைவரும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். பல தலைவர்களும் வாழத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்தவகையில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து தெரிவித்துள்ள அவர், “ தமிழகத்து சகோதர, சகோதரிகளுக்கும், உலகம் எங்கும் உள்ள தமிழர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், தமிழ் பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும்.

புத்தாண்டு ஒவ்வொருவரின் வாழ்விலும், ஆரோக்கியத்தையும், செல்வத்தையும், மகிழ்ச்சியையும், நிறைக்க இந்த மகிழ்ச்சியான திருநாளில் பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.