வங்காளதேசத்தில் ஒரே நாளில் 4,192 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!

covid19 1 3
covid19 1 3

உலக அளவில் கொரோனா பாதிப்பில் வங்காளதேசம் 33-வது இடத்தில் உள்ளது.

வங்காளதேசத்திலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி அந்நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 7 இலட்சத்தைத் தாண்டியுள்ளது.

இந்நிலையில், வங்காளதேசத்தில் நேற்று ஒரே நாளில் 4,192 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு பாதிப்பு எண்ணிக்கை 7,07,362 ஆக அதிகரித்துள்ளது. மேலும், அங்கு வைரஸ் தாக்குதலுக்கு 94 பேர் பலியானதை தொடர்ந்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 081 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவில் இருந்து 5.97 இலட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்தது.