இந்தியா மற்றும் பாகிஸ்தானின் அனைத்து பயணிகள் விமான சேவைகளையும் 30 நாட்களுக்கு இரத்து செய்துள்ளதாக கனடா அறிவித்துள்ளது.
மேற்படி நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் நிலை காரணமாக பயணிகள் வருகையை கட்டுப்படுத்தும் நோக்கில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கனடா போக்குவரத்து அமைச்சர் ஒமர் அல்காப்ரா அறிவித்துள்ளார்.